search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு தாக்குதல்"

    • மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.
    • தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நேபிடோவ்:

    மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

    இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் நடைபெற்ற திங்யான் திருவிழாவில் ராணுவ ஆட்சியின் தளபதி மின் ஆங் ஹலைங்கும் கலந்து கொண்டார்.

    இந்தநிலையில் மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதில் அங்குள்ள புத்த மடாலயம் மற்றும் ஓட்டல் போன்றவை இடிந்து தரைமட்டமாகின.

    இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 2 தேர்தல் பணியாளர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தனர்.
    • 100 வாக்காளர்களுக்கு 3 போலீசார் என்ற வகையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ந்தேதி தொடங்கி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 20 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ந்தேதி (இன்று) ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த இரு மாநிலங்களிலும் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை பிரசாரம் ஓய்ந்தது. நேற்று ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் அதிகாலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்பு நீண்ட வரிசையில் நிற்க தொடங்கிவிட்டார்கள். 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

    மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.57 லட்சம் பேர் வாக்கு உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக 40 தொகுதிகளிலும் 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்த வாக்குச்சாவடிகளில் 30 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டு இருந்தன. சர்வதேச எல்லை பகுதி அருகே இருப்பதால் அந்த 30 வாக்குச்சாவடிகளிலும் நேற்றே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று காலை மிசோரம் மாநில மக்கள் அச்சமின்றி வாக்களிக்க சென்றதை காண முடிந்தது. மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 9 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுப்பதிவின் போது வன்முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிசோரம் மாநிலத்தை இணைக்கும் மற்ற மாநில எல்லைகள் அனைத்தும் இன்று காலை சீல் வைக்கப்பட்டன.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் இன்று 20 தொகுதிகளுக்கும், வருகிற 17-ந்தேதி 70 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாகவும் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று ஓட்டுப்பதிவு நடந்து வரும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் மாவேயிஸ்டுகள் மிக மிக அதிகம் இருக்கும் தொகுதிகளாகும்.

    இதனால் இந்த 12 தொகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு இன்று மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக பஸ்தர் என்ற பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள 600 வாக்குச்சா வடிகளில் சுமார் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் சத்தீஸ்கரில் மட்டும் ஓட்டுப்பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு திட்ட மிட்டபடி 20 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவுக்கு முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக நாராயணப்பூர், தாந்தே வாடா, கோண்டா, மிஜப்பூர், காங்கேர் உள்பட 10 தொகுதி களில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கே ஓட்டுப்பதிவை முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 10 தொகுதி களிலும் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கரில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்டுகள் தாக்கியதில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். நேற்று மீண்டும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 தேர்தல் பணியாளர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்றும் சுக்மா மாவட்டத்தில் உள்ள தொண்டமார்க் பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    இதனால் இன்று காலை பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களை தேர்வு செய்ய 40.78 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது.

    இவர்களுக்காக 5 ஆயிரத்து 304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கரில் வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத் தப்படக்கூடாது என்பதற்காக பதட்டமான பகுதிகளில் மிக மிக அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 100 வாக்காளர்களுக்கு 3 போலீசார் என்ற வகையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர். அங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும், எதிர்க்கட்சிகளான ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாரதிய ஜனதா இடையே பலமுனை போட்டி நிலவுகிறது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ஆளும் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன.

    அதுபோல சத்தீஸ்கரில் பூபேஸ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கு இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. அங்கு கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளன. இன்று மாலை இரு மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.

    மற்ற மாநிலங்களில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் டிசம்பர் 3-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    • இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மும்பை:

    இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சில ஆட்டங்கள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மும்பை போலீசாருக்கு இ-மெயிலில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஸ்னோயிக்கு ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையெனில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிரபல தாதாவான லாரன்ஸ் பிஸ்னோய் தற்போது டெல்லி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது ஆட்கள் இந்த மிரட்டலை இ-மெயிலில் அனுப்பி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அந்த இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
    • குண்டு வெடிப்பில் 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

    பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் மாகாண தலைநகரில் நேற்று ஒருவரின் மோட்டார்சைக்கிள் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது.

    மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பெஷாவர் நகரின் ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

    வெடிகுண்டு செயலிழப்பு குழுவின் அறிக்கையின்படி, "குண்டு வெடிப்பில் 200 கிராம் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    • மிரட்டல் கடிதம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மும்பை:

    மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) இ-மெயில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

    இக்கடிதத்தை அனுப்பிய நபர், தான் தலிபான் என்றும் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான சிராஜூதீன் ஹக்கானியின் உத்தரவின் பேரில் மும்பையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த போவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

    மிரட்டல் கடிதம் குறித்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மும்பை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் தீவிர சோதனையில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    மும்பைக்கு தீவிரவாத மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உஷார் படுத்தப்பட்டன. நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் கேட்டு கொள்ளப்பட்டனர்.

    இதையடுத்து முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

    மேலும் மும்பை போலீசாரும் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே மும்பையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகள் தாக்குதல் ஆகியவை நடந்து உள்ளன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் தான் மும்பைக்கு தலிபான்கள் பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பள்ளியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
    • அனைத்து ஆப்கன் குழந்தைகளுக்கும் பயமின்றி பள்ளிக்குச் செல்ல உரிமை உண்டு.

    ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் நகரில் உள்ள மதரசா பள்ளியில் திடீரென்று குண்டு வெடித்தது. அங்கு தொழுகை நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

    இதில் 19 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.

    இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா- கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆப்கானிஸ்தான் குழந்தைகளும் பயமின்றி பள்ளிக்கு செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்ற பிறகு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மசூதிகள், மக்கள் கூடும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • தேசிய விடுதலை ராணுவ அமைப்பு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தகவல்

    கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், இதில் எட்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூர தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீதான இந்த தாக்குதல் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கி மூலம் நடத்தப்பட்டது போல் தெரிவதாக பிராந்திய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பெட்ரோ கடந்த மாத தொடக்கத்தில் கொலம்பியாவின் அதிபராக பதவியேற்ற பின்னர் பொது பாதுகாப்பு பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட மிக முக்கியமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையினர் ஆயுதங்களைக் கீழே போட்டு 2016 இல் அரசுடன் சமாதான உடன்படிக்கைக்கு மேற்கொண்டனர். மேலும் பல கிளர்ச்சிக் குழுக்கள் போர் நிறுத்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அமைதிக்கு எதிரான நாசவேலை என்று அதிபர் பெட்ரோ கூறியுள்ளார்.

    • வெடிகுண்டு தாக்குதலை துருக்கி நடத்தியதாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது.
    • குர்தீஷ் படைகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் என்று தெரிவித்தது.

    ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள டொஸ்ரஹூக் மாகாணத்தில் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 8 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த தாக்குதலை துருக்கி நடத்தியதாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது. குர்தீஷ் படைகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர் என்று தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இந்த தாக்குதல் ஈராக்கின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதாகும் என்றார். ஆனால் ஈராக்கின் குற்றச்சாட்டை துருக்கி மறுத்துள்ளது.

    இந்துத்வ வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த அமைப்பு புனேவில் நடந்த இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். #SanatanSanstha #ATS
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள நல சோபாரா என்ற பகுதியில் இருந்து இம்மாத தொடக்கத்தில் சனாதன் சஸ்தா அமைப்பை சேர்ந்த வைபவ் ராவத், ஷரத் கலாஸ்கர், சுதான்வ கோந்தலேகர், ஷ்ரீகாந்த் பன்கர்கார், அவினாஷ் பவார் ஆகிய 5 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

    இதில், வைபவ் ராவத் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், புனேவில் கடந்த ஆண்டு நடந்த இசைநிகழ்ச்சியில் சுதான்வ கோந்தலேகர், வைபவ் ராவத் ஆகிய இருவரும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், இந்துத்துவத்தை எதிர்க்கும் தனி நபர் பிரபலங்களை கொல்லவும் அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
    ×